இந்தியாவை குறிவைக்கும் தாலிபான்கள் அடுத்த வியூகம் என்ன?

india taliban target
By Irumporai Aug 27, 2021 07:22 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

தங்கள் நாட்டில் எடுக்கும் முடிவுகள் தொடர்பான நடவடிக்கைகளில் இந்தியா தலையிட கூடாது என்று தலிபான்களின் தலைவர் ஷஹாபுதீன் தில்வார் எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது ஆப்கானில் அதிகாரத்துக்கு வந்துள்ள தாலிபன்கள் சர்வாதிகார நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

மேலும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர முயற்சியிலும் இறங்கியுள்ளார்கள். இந்நிலையில் காபூலிலுள்ள பத்திரிகையாளர் ஒருவரிடம் தலிபான்களின் தலைவர் பேசும்போது இந்தியாவிற்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதில் ஆப்கானில் தலிபான்கள் எடுக்கும் முடிவுகள் தொடர்பான நடவடிக்கைகளில் இந்தியா தலையிட வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் தேவை இல்லாமல் இந்தியா மூக்கை நுழைப்பது இந்தியாவிற்கு நல்லதல்ல'என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், தாலிபான்கள் பரஸ்பர மரியாதை அடிப்படையில் அனைத்து நாடுகளுடனும் அமைதியான உறவையே விரும்புவதாகவும்  விரைவில் இந்தியா தங்கள் நிலையினை தெரிந்து கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார் அதன்பின் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய பொது மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான் நாட்டிற்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.