சிரியாவில் இடிபாடுகளில் சிக்கிய கர்ப்பிணி தாய்... - குழந்தை பிறந்த பிறகு இறந்த சோகம்...! வைரலாகும் வீடியோ...!

Viral Video Turkey Syria Turkey Earthquake
By Nandhini Feb 07, 2023 07:33 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

சிரியாவில் இடிபாடுகளில் சிக்கிய கர்ப்பிணி தாய் குழந்தை பிறந்த பிறகு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

துருக்கி நிலநடுக்கம்

துருக்கியில் நேற்று முதல் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை துருக்கியில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாயின.

மத்திய துருக்கியில் 9.9 கிமீ ஆழத்தில் தாக்கியது. பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கினர். இந்த நிலநடுக்கத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

the-moment-a-child-was-born-turkey-earthquake

குழந்தை பிறந்த பிறகு தாய் இறந்த சோகம்

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,

நேற்று சிரியாவின் அலெப்போவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் கர்ப்பிணித் தாய் ஒருவர் கிடந்தார். அவரை மக்கள் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது, அந்த இடத்திலேயே அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. பிரசவத்தில் குழந்தை பிறந்த தருணத்தில் அந்த தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த உலக மக்கள் சிரியா மற்றும் துருக்கி மக்களுக்கு கடவுள் பொறுமையைக் கொடுக்கட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணை காட்டட்டும் என்று சோகத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.