நிகழ்ச்சியில் பெண்ணின் கன்னத்தில் பளார் என்று அறைந்த அமைச்சர்
பெண்ணின் கன்னத்தில் கர்நாடகா வீட்டு வசதி துறை அமைச்சர் சோமனா அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தி சர்ச்சையை கிளப்பிய நிலையில் அமைச்சர் மன்னிப்பு கோரியுள்ளார்.
பெண்ணை தாக்கிய அமைச்சர்
கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரின் ஹாங்காலா கிராம பஞ்சாயத்து சார்பில் நேற்று முன்தினம் 173 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் சோமனா, பயனாளிகளுக்கு வீட்டு மனைக்கான சான்றிதழ்களை வழங்கினார்.
அப்போது, மேடையில் ஏறிய கெம்பம்மா என்ற பெண் பயனாளிகள் முறையாக தேர்வு செய்யப்படுவதிலலை, நிலம் வைத்திருப்போருக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் பிரமுகர் நஞ்சப்பா சொல்லும் நபர்களுக்கே நிலம் கொடுக்கப்பட்டுள்ளது எனக் கூறிவிட்டு சோமனாவின் காலில் விழுந்துள்ளார்.
இதை எதிர்பார்க்காத அமைச்சர் திடீரென பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பதவியது. வீடியோ காட்சிகள் வைரலான நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
மன்னிப்பு கேட்ட அமைச்சர்
இதையடுத்து தன்னுடைய செயலுக்கு அமைச்சர் சோமனா மன்னிப்பு கோரியுள்ளார். பெண்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
நானும் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வந்தேன். அந்த பெண்ணிடம் கையை நீட்டி வரிசையில் நிற்குமாறு கூறினேன். வேறு எந்த நோக்கமும் இல்லை என்று அமைச்சர் கூறியுள்ளார்.
இதனிடையே என்னை அமைச்சர் அவரது கையால் அறையவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
மனு கொடுக்க வந்த #பெண்ணை_கன்னத்தில்_அறைந்த கர்நாடக மாநிலம் #BJP_அமைச்சர்_சோமன்னா
— RAMJI (@newsreporterra1) October 24, 2022
பெண்ணை அறைந்த சம்பவத்தை, கண்டித்து #BJP அமைச்சர் எதிராக #விவசாயிகள்_சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்,சாலை மறியல்@Samaniyantweet@U2Brutus_off @stalinjacka @Stalinkumari @CMofKarnataka @INCKarnataka #Bjp pic.twitter.com/mxCBKWnLfx