சமந்தா, ஏமி ஜாக்சனின் காதல் தோல்விக்கு காரணம் இவரா? - ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகைகள் சமந்தா மற்றும் ஏமி ஜாக்சன் வாழ்க்கையில் காதல் ஏற்பட ஒருவர் தான் காரணமாக இருந்துள்ள தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருந்த சமந்தா மற்றும் ஏமி ஜாக்சனின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது கசப்பான ஒன்றாகவே அமைந்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் நடிகை சமந்தா தனது காதல் கணவரும், நடிகருமான நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்தார்.
இதேபோல் இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் பனயோட்டுவை காதலித்து, திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றெடுத்த ஏமி ஜாக்சன் அதன்பிறகு ஜார்ஜை பிரிந்துவிட்டார். இருவருக்குமிடையே நிச்சயம் மட்டும் நடந்தது.
ஆனால் ஒருகாலத்தில் நடிகைகள் சமந்தா மற்றும் ஏமியின் காதலுக்கு பிரபல தமிழ் இயக்குநர் ஒருவர் மட்டுமே காரணமாக இருந்துள்ளார் என்றே சொல்லலாம். அவர் வேறு யாருமல்ல. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தான். தமிழில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியான கௌதம் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.
இந்த படத்தின் படத்தை தெலுங்கில் ஏ மாய சேசாவே என்கிற பெயரில் கௌதம் எடுத்தார். இதில் நடித்தபோது தான் நாக சைதன்யா, சமந்தா இடையே காதல் ஏற்பட்டு பின்னர் திருமணம் வரை சென்று கடைசியில் பிரிவில் முடிந்தது.
இதேபோல் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இந்தியில் பிரதீக் பாபர், ஏமி ஜாக்சன் நடிக்க ஏக் தீவானா தா என ரீமேக் செய்யப்பட்டது. இதில் நடித்தபோது பிரதீக்கின் பெயரை தன் கையில் பச்சை குத்தி ஏமி தனது காதலை வெளிப்படுத்த ஒருகட்டத்தில் காதல் முறிவு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.