கொரோனா 2 வது டோஸ் எடுத்தவருக்கு கிடைத்த காந்த சக்தி.. வைரலாகும் வீடியோ!

india corona viral magneticman
By Irumporai Jun 11, 2021 04:59 PM GMT
Report

 மகராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா 2  டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் அவரது  உடலில் காந்த சக்தி வந்திருப்பதாகக் கூறியுள்ளார் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில்  பரவி வருகிறது.

மகராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள சிவாஜி சவுக்கில் வசித்து வருபவர் அரவிந்த் சோனர்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்  கொரோனா  2 வது டோஸ்  தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

அடுத்த சில நாட்களில் அவர் உடலில் காந்த சக்தி ஏற்பட்டு விட்டதாக கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

தற்போது அந்த வீடியோ  சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.

நாசிக்கை சேர்ந்த மருத்துவர்கள் அரவிந்தினைசோதனை செய்து பார்த்தனர். அவர்களாலும் இது எப்படி என்று அறிய முடியவில்லை .

இந்த நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டதால் காந்த சக்தி ஏற்பட்டதாக அரவிந்தகூறுவதை, மும்பையை சேர்ந்த மறுத்துள்ளனர்.

மேலும்,  தடுப்பூசி போட்டுக்கொண்டால் இதுபோன்ற எதுவும் நடக்காது' என்று தெரிவித்துள்ளார்.