’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட இயக்குனருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு
‘தி காஷ்மீர் பைல்ஸ்’ பட இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரிக்கு ஒய்-பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் 1990-களில் நடைபெற்ற பண்டிட்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பண்டிட்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறிய சம்பவங்கள் குறித்து ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற தலைப்பில் இந்தியில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
அனுபம் கெர், பல்லவி ஜோஷ், பாஷா சும்ப்லி, தர்ஷன் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை தாஷ்கெண்ட் ஃபைல்ஸ், ஹேட் ஸ்டோரி போன்ற படங்களை இயக்கிய விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கியுள்ளார்.
கடந்த 11-ம் தேதி வெளியான இந்த படம் குறிப்பிட்ட மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
மருபுறம் படம் வெளியான பல திரையரங்குகளில் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ வன்முறை முழக்கங்களுக்கு வழிவகுத்துள்ளது.
இந்த படம் இரு சமூகத்தினரிடையே மேலும் வெறுப்புணர்வு வலுவடைய வழிவகுக்கிறது என அரசியல் விமசகர்கள் தெரிவித்துள்ளனர்.
திரையரங்குகளுக்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறான முழக்கங்களைப் பயன்படுத்தும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் உலா வருகிறது.
அதில் ஒரு சிலர் கடுமையான மொழியைப் பயன்படுத்தி கோஷங்களை எழுப்புகிறார்கள்.
இந்நிலையில், தி காஷ்மீர் பைல்ஸின் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரிக்கு ஒய்-பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அவருக்கு ஒய்-பிரிவு பாதுகாப்பின் கீழ், எட்டு அதிகாரிகளின் பாதுகாப்பு வழங்கப்படும், அதில் இரண்டு கமாண்டோக்கள் மற்றும் காவல்துறை பணியாளர்கள் இருப்பார்கள்.
இந்த படத்திற்கு பல்வேறு மாநிலங்களில் பல்வேறு வரிச்சலுகைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

லண்டனில் இருந்து சென்னை சென்ற விமானத்தில் கோளாறு : 360 பயணிகளுடன் நடுவானில் வானில் வட்டமடித்த விமானம் IBC Tamil
