இரவில் உல்லாசம் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனுக்கு மனைவி செய்த வெறிச்செயல்

Tamil nadu Crime
By Anbu Selvam Mar 30, 2023 12:34 PM GMT
Report

தருமபுரி அருகே கள்ளக்காதலை தட்டி கேட்ட கணவனை அரிவாளால் வெட்டிய மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கள்ளத்தொடர்பை கண்டித்த கணவன்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி (50) .இவரின் மனைவி செல்வி (45) . இந்த தம்பதிக்கு மூன்று மகள்கள். இதில் மூத்த மகள் கடந்த சில வருடத்திற்கு முன் இறந்து விட்டார் . 2வது மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டனர் .3வது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.

இரவில் உல்லாசம் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனுக்கு மனைவி செய்த வெறிச்செயல் | The Husband Cheating The Frenzy Of The Sickle

அதே பகுதியை சேர்ந்த மெக்கானிக் தொழில் செய்து வரும் ராமன்(26) என்பவருக்கும் ,செல்விக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது . இதனை பலமுறை கண்டித்துயுள்ளார் கணவர் ராஜாமணி.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டில் உறங்கி கொண்டிருந்த ராஜாமணி முனங்கல் சத்தம் கேட்டு கண்விழித்து பார்த்த போது ராமனுடன் மனைவி உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். ராஜாமணி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு ராமனை அடிக்க சென்று உள்ளார் .

மனைவியின் வெறிச்செயல்

இதனால் ஆத்திரமடைந்த செல்வி அரிவாளால் சரமாரியாக கை ,கழுத்தில் வெட்டியுள்ளார் . இதில் சம்பவ இடத்தில் ராஜாமணி ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். அதை பார்த்த ராமன் அதிர்ச்சில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் .

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிய ராஜாமணியை ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் .

போலீஸ் விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் இப்படி செய்ததாக ஒப்புக்கொண்டார் செல்வி . இதையடுத்து ராமன் மற்றும் செல்வியை கைது செய்து சிறையில் அடைத்தனர் .