இளைஞர்களை கடித்து காயப்படுத்திய குதிரை - மக்கள் அச்சம்

Tamil nadu
By Thahir Sep 26, 2022 11:00 AM GMT
Report

விழுப்புரம் அருகே கோவில் குதிரை ஒன்று இரண்டு இளைஞர்களை கடித்து காயப்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கா.குப்பம் அருகே கொய்யம் பாக்கம் எனும் பகுதியில் ஒரு அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்கதர்கள் நேர்த்திக்கடனாக குதிரைகளை வாங்கி விடுவதை வாடிகையாக வைத்துள்ளனர்.

இளைஞர்களை கடித்த குதிரை 

இதனால் அந்த பகுதியில் ஏராளமான குதிரைகள் சுற்றி திரிகின்றது. நேற்று கோவில் குதிரை ஒன்று பொயப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன், பத்மநாபன் உள்ளிட்ட 2 இளைஞர்களை கடித்துள்ளது.

இதில் காயம் அடைந்த இளைஞர்களை மீட்ட அப்பகுதி பொதுமக்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சாலையில் சென்ற இளைஞர்களை குதிரை கடித்துள்ளதால் தங்களையும் குதிரை கடித்துவிடுமோ என்ற அச்சத்துடன் உள்ளனர் அப்பகுதி வாசிகள்.