நடத்துனரின் கன்னத்தில் பளார் என அறைந்த புளியந்தோப்பு அனிதா - பரபரப்பு வீடியோ
பேருந்தில் நடத்துனர் மற்றும் பெண் பயணிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் நாளடைவில் கைகலப்பாக மாறியது.
ஓடும் பேருந்தில் ஏறிய பெண்
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் அனிதா 30 வயதான இவர் மயிலாப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
அனிதா வியாசர்பாடி கணேசபுரம் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து வந்துள்ளார். அப்போது பெரம்பூர் செல்வதற்காக பாரிமுனையில் இருந்து பெரியார் நகர் நோக்கி வந்த மாநகர் பேருந்து 42A பேருந்து நிறுத்தத்தில் நின்றுள்ளது.
இதை பார்த்த அனிதா ஓடிச் சென்ற போது பேருந்து புறப்பட்டுள்ளது அப்போது அவர் பேருந்தில் ஏறியுள்ளார். ஓடும் பேருந்தில் ஏறியதால் ஆத்திரம் அடைந்த நடத்துனர் செல்வகுமார் இப்படி தான் பேருந்தில் ஏறுவதா என கேட்டுள்ளார்.
மேலும் பெண்ணை அவர் தகாத வார்த்தையில் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதை கேட்டு ஆத்திரம் அடைந்த பெண் பதிலுக்கு நடத்துனர் செல்வகுமாரை திட்டியுள்ளார்.
பெண் பயணி - நடத்துனர் இடையே மோதல்
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் என்பது அதிகரித்து்ளளது. பின்னர் பெரம்பூர் பேருந்து நிறுத்தம் வந்த போதும் அப்போது இருவரின் வாக்குவாதமும் குறையவில்லை.
ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த அனிதா நடத்துனரின்ட கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத நடத்துனர் பதிலுக்கு அனிதாவை கன்னத்தில் அறைந்துள்ளார்.
பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இவர்களை அப்பகுதியில் இருந்தவர்கள் சமாதானம் செய்ய முயன்ற போது அவர்கள் சமாதானம் அடையாததால் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பின்னர் அங்கு வந்த போலீசார் இருவரையும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.