பச்சிளம் குழந்தையை கன்னம் சிவக்கும் வரை அறைந்து கொண்டே இருந்த தந்தை - வைரலான பகீர் வீடியோ

Viral Video China
By Thahir Jul 27, 2023 03:05 AM GMT
Report

சீனாவில் பச்சிளம் குழந்தையை தந்தையே கண்ணம் சிவக்கும் படி கண்மூடித்தனமாக அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடூர தந்தை 

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த டெங் என்பவர் சென் என்ற பெண்ணுடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த சிறிது காலத்திலேயே கணவனை விட்டு சென் பிரிந்து சென்றார். அப்போது தன் குழந்தையை கணவர் டெங் வசம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார்.

The father brutally assaulted the child

இந்த நிலையில், டெங் தனது கைக்குழந்தையின் முகத்தில் சுமார் 30 வினாடிகள், 30 முறை அறையும் காட்சிகளை தனது காதலிக்கு அனுப்பியுள்ளார்.

அந்த வீடியோவில் வலியால் குழந்தை அழுத போதும், முகம் சிவந்து வீங்கும் வரை டெங் அறைந்து கொண்டே இருந்தார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானதை அடுத்து பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

கைது செய்த போலீசார் 

இச்சம்பவம் குறித்து குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஜான்ஜியாங் நகராட்சி திகிலுாட்டும் இந்த வீடியோ குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: டெங்கை விட்டு அக்குழந்தையின் தாயார் சென் பிரிந்து சென்றுவிட்டார்.

இதனால் தனியாக குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்த டெங், இந்த வீடியோவை கண்டதும் சென் திரும்பி வருவார் என நம்பி இச்செயலில் ஈடுபட்டிருக்கிறார்.

இந்த துன்புறுத்தலின் விளைவாக தாக்கப்பட்ட அந்த குழந்தைக்கு நீண்டகால உடல் உபாதைகள் எதுவும் ஏற்படவில்லை.

உள்ளாட்சி அமைப்பு அந்த குழந்தையை தற்போது கவனித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் தந்தை டெங்கை கைது செய்தனர்.