பிரபல இசையமைபாளர் காலமானார் - பிரதமர் மோடி,திரையுலகினர் இரங்கல்..!
பிரபல இசையமைப்பாளர் பண்டிட் ஷிவ்குமார் ஷர்மா காலமானார்.அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர் பண்டிட் ஷிவ்குமார் ஷர்மா.பாரம்பரிய இசைக்கருவியான சந்துார் இசைக்கருவியை பிரபலமாக்கியவர் என்ற பெருமையை பெற்றவர் இவர்.
பாடகர் தம்பதிக்கு மகனாக பிறந்த இவர் 5 வயதிலேயே தனது அப்பாவிடம் இசையை கற்க தொடங்கினார். ஏராளமான பாடல்களுக்கு இசையமைத்துள்ள இவர் பல ஆல்பங்களையும் உருவாக்கியுள்ளார்.
பத்மஸ்ரீ மற்றும் பத்மவிபூஷன் விருதுகளை பெற்ற ஷிவ்குமார் இசைத்துறையில் ஆற்றிய சேவைக்களுக்காக பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஷிவ்குமார் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக காலமானார்.
அவரின் மறைக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் பண்டிட் ஷிவ்குமார் ஷர்மா ஜியின் மறைவால் நமது கலாச்சார உலகம் ஏழ்மையில் உள்ளது.
உலக அளவில் சந்தூரை பிரபலப்படுத்தினார். வரும் தலைமுறையினரையும் அவரது இசை கவரும் வகையில் இருக்கும். அவருடனான எனது தொடர்புகளை நான் அன்போடு நினைவில் கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி... என குறிப்பிட்டுள்ளார்.
Our cultural world is poorer with the demise of Pandit Shivkumar Sharma Ji. He popularised the Santoor at a global level. His music will continue to enthral the coming generations. I fondly remember my interactions with him. Condolences to his family and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) May 10, 2022