சிம் கார்டு வாங்க சென்ற நடிகையை அறைக்குள் வைத்து பூட்டிய ஊழியர்
சிம் கார்டு வாங்க சென்ற நடிகையை தனியார் தொலைத்தொடர்புத்துறை ஊழியர் அலுவலகத்தில் உள்ள அறையில் வைத்து பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகையை அறையில் பூட்டிய ஊழியர்
மலையாளத்தில் 'அங்கமாலி டைரிஸ்',' அய்யப்பனும் கோஷியும்' போன்ற படங்களில் நடித்தவர் நடிகை அன்ன ராஜன்.
இவர் கொச்சியில் உள்ள ஆலுவா நகராட்சி அலுவலகம் அருகே உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு நேற்று புதிய சிம்கார்டு வாங்கச் சென்றார்.
அப்போது அங்கு அலுவலகத்தில் இருந்த ஊழியருடன் சிம் கார்டு வாங்குவதில் நடிகை அன்னராஜனுக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அப்போது திடீரென அந்த ஊழியர், நடிகை அன்னராஜனை அலுவலகத்தில் ஒரு அறையில் வைத்து பூட்டியதாக கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு நடிகை அன்னராஜன் அறையில் இருந்து திறந்து விடப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து அருகிலிருந்த போலீஸ்நிலையத்தில் தொலைத் தொடர்பு நிறுவன ஊழியர் மீது நடிகை அன்னராஜன் புகார் அளித்துள்ளார்.
இப்புகார் குறித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது சமரசமாக போவதாக இருதரப்பினரும் கூறியதையடுத்து இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது