பேய் பிடித்திருப்பதாக கூறி பெண்ணை நெருப்பு குழியில் நிற்க வைத்த கொடூரம்..!

By Thahir May 20, 2022 02:42 AM GMT
Report

தெலுங்கானாவில் பெண்ணுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி எரியும் நெருப்பு குழியில் நிற்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் விக்ராபாத் மாவட்டத்தில் 19 வயது பெண்ணுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

பேய் பிடித்திருப்பதாக கூறி பெண்ணை நெருப்பு குழியில் நிற்க வைத்த கொடூரம்..! | The Cruelty That Made The Woman Stand Fire Pit

இதனால் உறவினர்கள் சிலர் பெண்ணுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி அந்த பெண்ணை மாந்தீரிகவாதியிடம் அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதை நம்பி பெற்றோர் இளம் பெண்ணை மாந்தீரிகவாதியிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அந்த மாந்தீரீகவாதி பெண்ணுக்கு பேய் பிடித்திருப்பதாகவும் பேயை விரட்ட தீ குழியில் நிற்க வைத்து பூஜைகள் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

இதை கேட்ட பெற்றோர் பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். பின்னர் எரியூட்டப்பட்ட தீக்குழியில் அந்த இளம்பெண்ணை நடக்க வைத்துள்ளனர்.

நெருப்பு கனலின் வெப்பத்தில் அந்த இளம்பெண் மயக்கமடைந்து தீக்குழியல் விழுந்துள்ளார். அப்போது மாந்தீரீகவாதி மீண்டும் அந்த பெண்ணை எழுந்த நிற்க வைத்துள்ளார்.

அப்போது அந்த இளம் பெண்ணின் உடல் முழுவதும் தீ காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாந்தீரீகவாதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.