என்னை பாராட்டு மழையில் நனைய வைத்தவர்கள் நீங்கள் தான் - துாய்மை பணியாளர்களை பாராட்டிய முதலமைச்சர்

M K Stalin Government of Tamil Nadu Chennai
By Thahir Jan 31, 2023 09:51 AM GMT
Report

மழை காலத்தில் எங்கும் மழை நீர் தேங்கவில்லை என்ற செய்தி கேட்டு பாராட்டு மழையில் நனைய காரணம் நமது தூய்மை பணியாளர்கள்தான் என்று துாய்மை பணியாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

வெகுவாக பாராட்டிய முதலமைச்சர் 

மழைக்காலத்தில் சிறப்பாக பணியாற்றிய சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழாவானது இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மாநகராட்சி ஊழியர்களை வெகுவாக பாராட்டினார்.

The Chief Minister praised the sanitation workers

அவர் கூறுகையில், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது தான் நமது திராவிட மாடல் ஆட்சி. கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் சென்னை மேயராக நான் பணியாற்றி உள்ளேன். இங்குள்ள ஒவ்வொரு வார்டும், ஒவ்வொரு தெருவும் எனக்கு நன்றாக தெரியும்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2 முக்கியமான சாதனைகளை செய்துள்ளோம். ஒன்று கொரோனாவை கட்டுப்படுத்தி உள்ளோம். மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காத்துள்ளோம். என்ன மழை பெய்தாலும் தண்ணீர் எங்கும் தேங்கவில்லை என்ற சூழலை உருவாக்கி மிகப்பெரிய சாதனை படைத்துள்ளோம்.

எங்கும் மழை நீர் தேங்கவில்லை என்ற செய்தி கேட்டு பெரும் மகிழ்ச்சி நான் அடைந்தேன். அந்தளவுக்கு பாராட்டு மழையில் நனைய காரணம் நமது தூய்மை பணியாளர்கள்தான். என மிகவும் பெருமையாக பாராட்டி மகிழ்ந்தார் தமிழ்நாடு முதலமைச்சர்.

மேலும் அவர் கூறுகையில், தூய்மை பணியாளர்களின் பணி மிக மிக மகத்தானது. அதே போல, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, காவல்துறையினர் என அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். இரவு பகல் பாராமல் அமைச்சர்கள், மாநகராட்சி மேயர், அரசு அதிகாரிகள் பணியாற்றினார்கள். எனவும் தனது பாராட்டை தெரிவித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.