மெல்லமா நடந்து வந்தது ஒரு குத்தமா? - திருமணத்தை நிறுத்திய மணமகள்

Uttar Pradesh Marriage
By Thahir Feb 11, 2023 07:02 AM GMT
Report

உத்தர பிரதேசத்தில் திருமண மேடையில் மணமகளின் கையை பிடித்து மணமகன் இழுத்ததால் ஆத்திரம் அடைந்த மணப்பெண் செய்த காரியம் குடும்பத்தினரை அதிர்ச்சி அடையச் செய்தது.

திருமணம் ஊர்வலம் 

உத்தர பிரதேசத்தில் பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள ரசாயினி என்ற கிராமத்தில் வசித்து வரும் ஆதேஷ் என்பவருக்கும், ஜஸ்ரானா நகரில் ஜஜுமாய் கிராமத்தில் வசித்து வரும் மனோஜ் குமாரி என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து திருமண வேளைகளில் குடும்பத்தினர் படு தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், திருமண ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு விருந்தினர் இல்லம் வந்தடைந்தது.

பின்னர் இரவு உணவு முடிந்த பின்னர், மணமக்கள் இருவரும் மாலை மாற்றி கொள்ளும் நிகழ்ச்சிக்கு தயாரானார்கள்.இதற்காக மணமகன் முன்பே மேடைக்கு வந்துள்ளார்.

மோதலில் முடிந்த திருமணம் 

தோழிகளின் படை சூழ அலங்காரங்களுடன் வெட்கம் கொண்ட நடையுடன் மேடைக்கு வந்தார். அப்போது மணமகன் ஆதேஷ் சட்டென மணமகளின் கையை பிடித்து சற்று வேகமாக வரும் படி இழுத்துள்ளார்.

The bride who called off the wedding

இதனால் மணமகள் மனோஜ் குமாரி மேடையில் தவறி விழுந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், இந்த திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்து, ரத்து செய்துள்ளார்.

ஆதேஷின் செயலால் மணமகள் குடும்பத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் மேடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மணமகளை சமரசம் செய்ய முயன்றுள்ளனர்.

சமரசத்தை ஏற்க மறுத்த அந்த மணப்பெண் திருமணம் வேண்டாம் என்று உறுதிபட கூறிவிட்டார். இதனால் திருமணம் நின்றது.