நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க சொல்லி வற்புறுத்திய காதலன்...காதலிக்கு நிகழ்ந்த கொடூரம்..!
தனது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க சொல்லி வற்புறுத்திய காதலன் மற்றும் அவரது நண்பர்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் புஷ்பலதா.22 வயதான இவர் அதே பகுதியைச் சேர்ந்த மேலத் தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார்.
இருவரின் நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.ஹரிஹரன் இளம் பெண்ணுடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.
அதனை அவருக்கு தெரியாமல் வீடியோ எடுத்த ஹரிஹரன் அதை காட்டி அந்த பெண்ணை மிரட்டி தனது நண்பர்களுடனும் உல்லாசமாக இருக்க நிர்பந்தித்துள்ளார்.
நீ சம்மதிக்கவில்லை என்றால் வீடியோவை சமூக வளைதலங்களில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அச்சம் அடைந்த அந்த பெண் நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க சம்மதித்துள்ளார்.
தொடர்ந்து அதுபோன்று இருக்க சொல்லி மிரட்டி வந்துள்ளனர். இதுகுறித்து புஷ்பலதா அளித்த புகாரின்பேரில் ஹரிகரன் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 8 பேரை விருதுநகர் ஊரககாவல் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.