ஆடை போடாமல் போட்டோ ஷூட் நடத்திய பிரபல நடிகை - மீண்டும் சர்ச்சை
சோஷியல் மீடியாவில் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகைதான் உர்ஃபி ஜாவத்.
யார் இவர்?
பிக்பாஸில் கலந்துகொண்ட பிறகு சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காவே மாறினார்.
1997ம் ஆண்டு லக்னோவில் பிறந்தவர் உர்பி. பள்ளிப்படிப்பையும் அங்கேயும் முடித்து கல்லூரியில் Mass communication முடித்தார்.
பின்னர் மாடலிங், சின்னத்திரையில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
எப்போதும் தான் ட்ரெண்டிங்கில் இருக்க வேண்டும் என்பதற்காகவே தன்னுடைய உடையில் வித்தியாசத்தைக் காட்டி வருபர்தான் உர்ஃபி ஜாவத்.
கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் வைத்து உடை தயாரித்து அதனை அணிந்து சோஷியல் மீடியாவில் வெளியிடுவார்.
உர்ஃபி ஜாவித்திற்கு சிறு வயதிலிருந்தே வித்தியாசமாக உடை அணிந்துகொள்ளவது என்றால் மிகவும் பிடிக்குமாம்.
மீண்டும் சர்ச்சை
தற்போது உர்ஃபியின் வித்தியாசமான ட்ரெஸ் சென்ஸிற்கு பின்னாடி ஒரு குழுவே வேலை செய்கிறதாம்.
சில சீரியல்களிலும் நடித்தாலும் வித்தியாசமான போட்டோஷூட்டும், சோஷியல் மீடியாவும்தான் முழு வேலையாக இருக்கிறது உர்பிக்கு.
உர்பியின் ஒவ்வொரு புகைப்படமும் வைரலாவது மட்டுமின்றி சர்ச்சைகளையும் கிளப்பும். ஒரு குரூப் உர்பிக்கு எதிராக இருந்தாலும் அவருக்கு ஆதரவாக பல ரசிகர்களும் உண்டு.
பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் உர்பியின் ஆடை வித்தியாசம் குறித்து அவரைப்பாராட்டி பேசினார். அவரின் பாராட்டு உர்பிக்கு மிகப்பெரிய உத்வேகத்தைக் கொடுத்தது.
சமீபத்திய சில புகைப்படங்களும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டானது. பெயிண்ட், இரும்பு செயின் போன்ற பொருட்களால் உடை அணிந்தது மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியது.