திருமணமாகி ஒரே மாதம் - தேனிலவுக்கு சென்று வந்த நிலையில் தம்பதி தற்கொலை!

Chennai Death
By Sumathi Oct 22, 2022 04:52 AM GMT
Report

திருமணமான ஒரே மாதத்தில் புதுமண தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுமண தம்பதி

சென்னை தண்டையார்பேட்டை கைலாசம் தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (26). வடபழனியில் உள்ள தனியார் கியாஸ் சிலிண்டர் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது.

திருமணமாகி ஒரே மாதம் - தேனிலவுக்கு சென்று வந்த நிலையில் தம்பதி தற்கொலை! | Thandaiyarpet Newlywed Couple Commits Suicide

தொடர்ந்து, 14ஆம் தேதி தேனிலவுக்காக தங்கள் குடும்பத்தினருடன் ஊட்டி, கொடைக்கானலுக்கு ஒரு வாரம் சென்றுவிட்டு வந்துள்ளனர். இந்நிலையில், திருமணம் ஆகி ஒரு மாதமே ஆன நிலையில் சாமுண்டீஸ்வரி கடந்த 15-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 தற்கொலை 

மனைவி தற்கொலை செய்து கொண்டதால் ஜெய்சங்கர் சோகத்தில் காணப்பட்டார். இந்நிலையில் அவர் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே வாயில் நுரை தள்ளியபடி சாலையில் மயங்கி கிடந்தார்.

இதை அறிந்த அவரது உறவினர்கள் அவரை தண்டையார்பேட்டையில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் விஷம் குடித்து இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.