கோலி இல்லை, இந்திய அணியின் முக்கியமான வீரர் இவர் தான் - முன்னாள் பாகிஸ்தான் வீரர் கணிப்பு
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடைபெறுகிறது.
இந்த போட்டிக்கு உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளது. இத்தகைய போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறை என்பது அதற்கு ஒரு காரணம்.
இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டியில், இந்திய அணியில் மற்ற வீரர்களை விட ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் மதிப்புமிக்க வீரராக இருப்பார் என்கிறார்.
இதற்கான காரணத்தை கூறும் அவர், "கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீச்சாளர்களின் பங்கு மிகவும் அவசியமானது, குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் பவுலர்கள் அதிகம் விக்கெட் எடுத்தால், அந்த அணி போட்டியில் வெற்றிப் பெறும்.
அந்த வகையில் ரவீந்திர ஜடேஜாவைப் ஒரு முப்பரிமாண வீரர். அவரைப் போன்ற ஒரு வீரரை நீங்கள் வெளியே வைத்திருக்க முடியாது, அவர் நிச்சயம் அணியில் விளையாட வேண்டும்.
முக்கிய இடைவெளியில் அவர் உங்களுக்கு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தித் தருவார். அதே சமயம், அவர் லோ ஆர்டரில் சில பல ரன்களை எடுத்துக் கொடுக்கிறார்.
அவருடைய ஃபீல்டிங் திறமையும் கூட மூலம் கிடைக்கும் ரன் அவுட்கள் கூட அணியை பாதிக்கும். எனவே, அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அணியின் மிகுந்த மதிப்புமிக்க வீரராக ஜடேஜா இருக்கப் போகிறார்" என்று கூறியுள்ளார்.