ஜம்மு-காஷ்மீர் : பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் லஷ்கர்-இ-தொய்பா தளபதி சுட்டுக் கொலை!

jammu&kashmir encounterattack LeTcommanderdied anantnag securityforces kulgamencounter
By Swetha Subash Apr 09, 2022 05:09 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

ஜம்மு- காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த என்கவுண்டரில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் தளபதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டம் சாகிசமாத் அடுத்த டி.எச் பகுதியில் என்கவுண்டர் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதில் உள்ளூரை சேர்ந்த ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அனந்த்நாக் மாவட்டம், சிர்ஹாமா பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மற்றொரு என்கவுன்டரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவங்களை அடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனந்த்நாக்கின் சில பகுதிகளில் இணையம் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறித்த குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில், அப்பகுதியை சுற்றி வளைத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது குறிப்பிடத்தக்கது.