திரைப்பட படப்பிடிப்பின் போது பயங்கர தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு..!

Ranveer Singh
By Thahir Jul 30, 2022 06:24 AM GMT
Report

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

படப்பிடிப்பு தளத்தில் பயங்கர தீ

ரன்பீர் கபூர் - ஷ்ரத்தா கபூர் நடிப்பில் பெயரிடப்படாத ஹிந்தி திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், மேற்கு அந்தேரி பகுதியில் உள்ள சித்திரகூட் படப்பிடிப்பு தளத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று மாலை 4.30 மணியளவில் திடீரென படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

திரைப்பட படப்பிடிப்பின் போது பயங்கர தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு..! | Terrible Fire During Movie Shoot One Dead

இதையடுத்து விரைந்து வந்த அவர்கள், இரவு 10.30 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் மனீஸ் தேவாஷி என்பவர் தீயில் கருகி பலியானார்.

தீ விபத்தினால் படப்பிடிப்பு தளம் முழுவதும் கரும்புகையாக காட்சி அளித்தது. இந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

வரும் 2023-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரன்பீர் கபூரும், ஷ்ரத்தா கபூரும் ஸ்பெயினில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சில தினங்களுக்கு முன்னர் தான் மும்பை வந்தது குறிப்பிடத்தக்கது.