நம்பர் ஒன் கில்லாடி வீரரான ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி - ரசிகர்கள் வேதனை!
ஜெர்மனியின் ஹாலோவில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியின் 2வது சுற்றில் கில்லாடி வீரர் ரோஜர் பெடரர் தோல்வியை தழுவிய செயல் அவர் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகையே தங்கள் அபார விளையாட்டின் மூலம் கட்டுக்குள் வைத்திருந்தவர்கள் தற்போது தடுமாறும் சீசன் போல. அதில் மிக முக்கியமானவர் ரோஜர் பெடரர்.
ஜெர்மனியின் ஹாலோவில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியின் இறுதி சுற்றில் 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் கனடாவை சேர்ந்த 20 வயதான பெலிக்ஸ் ஆஜர் அலியஸ்சிம், ரோஜர் பெடரரையே தோற்கடித்துள்ளார்.
வருகிற 28-ந்தேதி தொடங்கும் விம்பிள்டன் போட்டிக்கு தயாராகி வரும் பெடரருக்கு இந்த தோல்வி பின்னடைவாக அமைந்துள்ளது.
நம்பர் ஒன் வீரராக செயல்பட்டு வந்த ரோஜர் பெடரரின் இந்த தோல்வி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது