லாரி - கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி!
Accident
Death
Tenkasi
By Sumathi
a year ago
லாரி - கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கார் விபத்து
புளியங்குடியை சேர்ந்த 6 பேர் காரில் குற்றாலம் சென்றுள்ளனர். அதன்பின் அங்கு குளித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது, தென்காசி சிங்கிலிபட்டியில் சென்றுகொண்டிருந்த போது காரும்,
சிமெண்ட் லாரி ஒன்றும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் சுக்கு நூறாக நொறுங்கியது. இதில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
6 பேர் பலி
இந்த விபத்தை தொடர்ந்து, தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனே சம்பவ இடம் விரைந்த போலீஸார் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.
மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.