நடிகர் சிரஞ்சீவி கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார்
தெலுங்கு திரைப்பட உலகில் உச்ச நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் சிரஞ்சீவி.
இவர் கடைசியாக ‘சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது ‘ஆச்சார்யா’என்ற படத்தில் நடித்துக் வருகிறார்.
மேலும் நடிகர் அஜித் நடித்து தமிழில் வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகும் போலா சங்கர் என்ற படத்திலும்,
இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில், மலையாளத்தில் மோகன் லால் நடித்து வெளிவந்த லூசிபர் படத்தின் ரீமேக்காக உருவாகும் ’காட்பாதர்’ படத்திலும் சிரஞ்சீவி நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக கடந்த ஜனவரி 26-ந் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “கொரோனா நெகடிவ், முழு வேகத்துடன் மீண்டும் பணிக்குச் செல்கிறேன், உங்கள் அனைவரின் அன்புக்கும், நான் குணமடைய வாழ்த்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி” என பதிவிட்டுள்ளார்.
Tested Negative. Back to work & Back in Action with full steam :) Heartfelt thanks for all your love and wishes for my recovery. Humbled & Energised! pic.twitter.com/zFqzrOxBCv
— Chiranjeevi Konidela (@KChiruTweets) February 6, 2022