ஆஸ்கர் வாங்குனா என்ன? எனக்கு ஏ.ஆர்.ரஹ்மானை தெரியாது: பாலகிருஷ்ணா பேட்டியால் சர்ச்சை!

balakrishna arrahuman Nandamuri
By Irumporai Jul 21, 2021 09:19 AM GMT
Report

பிரபல தெலுங்குநடிகர் பாலகிருஷ்ணா ஒரு தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ஏ.ஆர்.ரகுமானை மோசமாக விமர்சனம் செய்ததால் ஏ.ஆர் ரகுமான் ரசிகர்கள் பாலகிருஷ்ணா மீது கோபத்தில் உள்ளனர்.

தெலுங்கு திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள பாலகிருஷ்ணா ஒரு தனியார் தெலுங்கு ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், ஏ.ஆர். ரகுமான் பற்றிய கேள்விக்கு பதில் கூறிய பாலகிருஷ்ணா அவர், ஆஸ்கர் விருது வாங்கி இருக்கலாம். ஆனால் அவர் யார் என்றே எனக்கு தெரியாது பாரத ரத்னா போன்ற விருதுகள் என்.டி.ஆரின் கால் விரலுக்கு சமம் என்றும் கூறியுள்ளார்.

அதே சமயம் எந்த உயரிய விருதும் தன்னுடைய குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைக்கு ஈடாகாது, என பாலகிருஷ்ணா அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

பால கிருஷ்ணாவின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வெளியாகி அவரின் கருத்துக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் இணையவாசிகள்.

மேலும், பாலகிருஷ்ணா தன் படங்களுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமானை அணுகியதாகவும் அவர் மறுத்ததால் எழுந்த காழ்ப்புணர்ச்சியில் இப்படி பேசியிருப்பதாகவும் கூறுகின்றனர்.