என் மேல் ஊர்வது போல இருந்துச்சு : விமானத்தில் சில்மிஷம் கன்னத்தில் பளார் விட்ட நடிகை

By Irumporai Apr 04, 2023 05:37 PM GMT
Report

விமானத்தில் தனக்கு நடந்த பாலியல் தொந்தரவு குறித்து பிரபல,சின்னத்திரை நடிகை பகீர் தகவலை கூறியுள்ளார்.

பாக்கியலட்சுமி தொடர்  

பாக்கியலட்சுமி சீரியலில் செழியனின் மனைவியும், பாக்கியலட்சுமியின் மருமகளான ஜெனி என்ற கதாபாத்திரத்தில் திவ்யா கணேஷ் நடித்து வருகின்றார். சீரியலைத் தவிர படங்களிலும் நடித்திருக்கிறார் திவ்யா. குறிப்பாக கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்த அட்டு என்கிற படத்தில் திவ்யா நடித்திருந்தார். இப்படம் பெரியளவில் வெற்றியடையாததால், சீரியலிலேயே கவனம் செலுத்த தொடங்கிய திவ்யா, தற்போது சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பாலியல் தொந்தரவு  

இந்த நிலையில் திவ்யா கணேஷ் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன்னை பற்றி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், விமானத்தில் பயணிக்கும் போது தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல் குறித்து பேசினார். ஒருநாள் இரவு நேரத்தில் ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தேன். அப்போது என் இடுப்பு பகுதியில் ஏதோ ஊர்வது போன்று இருந்தது.

என் மேல் ஊர்வது போல இருந்துச்சு : விமானத்தில் சில்மிஷம் கன்னத்தில் பளார் விட்ட நடிகை | Television Baakiyalakshmi Serial Actress

பூச்சியாக இருக்குமோ என்று பார்க்கும் போது எதுவும் இல்லை. பின்னரும் அதேபோன்ற உணர்வு ஏற்பட்டது. அப்போது தான் ஒரு நபர் இந்த கேவலமான செயலை செய்தது தெரியவந்தது. இதனால் செம்ம டென்ஷன் ஆனேன். உடனடியாக அந்தாள் கையை பிடித்து கன்னத்திலே நாலு அறை பளார் பளார்ன்னு கொடுத்தேன் என தெரிவித்துள்ளார்.

பிறருக்கும் இதுபோன்று சம்பவங்கள் நடக்கலாம். அந்த சமயத்தில் இதனை சகித்துக் கொண்டு கடந்து செல்லாமல், உடனடியாக அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என தெரிவித்துக்கொண்டார். தற்போது அவர் அளித்துள்ள இந்த பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.