என் 100 குழந்தைகளுக்கு 17 பில்லியன் டாலர் சொத்தை வழங்குகிறேன் - டெலிகிராம் சிஇஓ
17 பில்லியன் டாலர் சொத்தை என் 106 பிள்ளைகளுக்கு வழங்குவதாக டெலிகிராம் சிஇஓ அறிவித்துள்ளார்.
106 பிள்ளைகளுக்கும் சொத்து
டெலிகிராம் மெசஞ்சர் சிஇஓ பவெல் துரோவ்(40). சட்டவிரோத குற்றச் செயல்களுக்கு டெலிகிராம் நிறுவனம் துணை போன குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் பிரான்ஸ் நாட்டில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.
பின் ஜாமீன் பெற்றார். இந்நிலையில் பேட்டி ஒன்றில், “எனது குழந்தைகளுக்கு இடையே நான் எந்தவிதமான வித்யாசத்தையும் பார்ப்பதில்லை. இயற்கையான முறையில் கருத்தரித்தவர்கள், எனது விந்தணு தானத்தால் பிறந்தவர்கள் என எல்லோரும் எனக்கு ஒன்றுதான்.
டெலிகிராம் சிஇஓ
எல்லோருக்கும் சமமான உரிமை உண்டு என நினைக்கிறேன். அவர்கள் யாரையும் சாராமல் சுயமாக, சுதந்திரமாக வளர வேண்டும் என நினைக்கிறேன். ஒரு சாமானியனை போலவே அவர்கள் வளர வேண்டும். எல்லோருக்கும் எனது சொத்தை சரிசமமாக பகிர்ந்து தர விரும்புகிறேன்.
நான் உயில் எழுதிய போது எனக்கு இந்த திட்டம் வந்தது” எனத் தெரிவித்துள்ளார். இவருக்கு இயற்கையான முறையில் 6 குழந்தைகள் உள்ளன. விந்தணு தானம் மூலம் சுமார் 100 குழந்தைகளுக்கு அவர் உயிர் கொடுத்துள்ளார்.
இவருக்கு $17 பில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளது. ஒரு குழந்தைக்கு சுமார் $131 மில்லியன் முதல் $161 மில்லியன் வரை கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.