Wednesday, Jun 18, 2025

பாம்புக்கு முத்தம் கொடுத்து ரீல்ஸ் - லைக்ஸ்க்கு ஆசைப்பட்டு பறிபோன உயிர்

Snake Telangana
By Karthikraja 9 months ago
Report

பாம்புக்கு முத்தம் கொடுத்து ரீல்ஸ் செய்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாம்பு பிடி வீரர்

சமூகவலைத்தளங்களில் கவனம் ஈர்க்க பலரும் பல்வேறு சாகசங்களை செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இதில் சிலர் உயிரிழந்துள்ள சம்பவமும் நடந்துள்ளது. 

telangana snake

இது போல் பாம்பை வைத்து சாகசம் செய்த இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் உள்ள தேசாய்பேட் கிராமத்தை சேர்ந்த பாம்பு பிடி வீரர் கங்காராம். இவரது மகன் சிவ ராஜூலு(32).

வீடியோ

தேசாய்பேட் காலனிப்பகுதியில் புகுந்த 6 அடி நாகப்பாம்பை பிடிக்க கங்காராமுக்கு அழைப்பு வந்துள்ளது. பாம்பு பிடிப்பது எப்படி என்று தந்தையிடம் கற்று தேர்ச்சியடைந்த சிவ ராஜூலு விரைந்து சென்று அந்த பாம்பை பிடித்துள்ளார். 

அத்தோடு பாம்பை முத்தம் கொடுப்பது போல் பாம்பின் வாயை வாயில் வைத்து வீடியோ எடுத்துள்ளார். மேலும் பாம்பை வாயில் வைத்து கடித்து கொண்டே ஸ்டைலாக தலைமுடியை வாரி போஸ் கொடுத்துள்ளார். இந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

உயிரிழப்பு

வீடியோவுக்கு போஸ் கொடுக்கும் போது பாம்பு கடித்ததை உணராத இவர், விஷம் தலைக்கேற சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்ட அருகில் இருந்த சிலர் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதை செய்ய வேண்டாம் என பலரும் அறிவுறுத்தியும் லைக்ஸ்க்கு ஆசைப்பட்டு செய்த செயல் சிவாவின் உயிரை பறித்துள்ளது.