இனி எழும்பூர் ரயில் நிலையம் வர வேண்டிய அவசியம் இல்லை - தாம்பரத்தில் நின்று செல்லும் தேஜஸ் ரயில்..!

Chennai Indian Railways
By Thahir Aug 03, 2023 04:09 AM GMT
Report

சென்னையில் இருந்து திருச்சி, திண்டுக்கல் மார்க்கமாக மதுரை வரை செல்லும் தேஜஸ் விரைவு ரயில் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பயணிகள் கோரிக்கை 

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நாள்தோறும் காலை 6 மணிக்கு புறப்படும் தேஜஸ் விரைவு ரயில் பகல் 12.15 மணிக்கு மதுரை சென்றடையும். மறு வழியில் மதுரையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு இரவு 9.15 மணிக்கு வந்து சேரும்.

tejas train stopping at tambaram

இந்த ரயில் திருச்சி, திண்டுக்கல் ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று சென்ற நிலையில் தற்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்க பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

தாம்பரத்தில் நின்று செல்லும் 

இதையடுத்து சோதனை முறையாக தேஜஸ் ரயில் 6 மாத காலம் தாம்பரத்தில் நிற்கும் என தெற்கு ரயில்வே அறிவித்து இருந்தது.

இந்த கால அவகாசம் ஆகஸ்ட் 26-ம் தேதியுடன் முடியும் நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.