இன்ஸ்டாகிராம் பழக்கம்: பிளஸ்-1 மாணவியை சிறை வைத்து பாலியல் வன்கொடுமை - கொடூரம்!

Tamil nadu Sexual harassment Crime Nagercoil
By Jiyath Jan 15, 2024 04:14 AM GMT
Report

நண்பர் வீட்டில் சிறை வைத்து 11-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

நாகர்கோவில் மேல கலுங்கடியை சேர்ந்தவர் வசந்தராஜ் (23). இவருக்கும், ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் பழக்கம்: பிளஸ்-1 மாணவியை சிறை வைத்து பாலியல் வன்கொடுமை - கொடூரம்! | Teenager Raped Plus 1 Student Keeping Prisoner

இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்த மாணவியை தனது நண்பர் வீட்டுக்கு அழைத்த வசந்தராஜ், திருணம் செய்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

பின்னர் அந்த மாணவியை தன்வசப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அந்த மாணவியை 3 நாட்களும் அங்கேயே சிறை வைத்து சீரழித்துள்ளார்.

கைது

மேலும், இதுகுறித்து வெளியே கூறக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார். இதனையடுத்து வீடு திரும்பிய மாணவி நடந்த கொடுமைகள் குறித்து தனது தாயாரிடம் கூறியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் பழக்கம்: பிளஸ்-1 மாணவியை சிறை வைத்து பாலியல் வன்கொடுமை - கொடூரம்! | Teenager Raped Plus 1 Student Keeping Prisoner

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் வசந்தராஜை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைதான வசந்தராஜ் மீது கடந்த 2020-ம் ஆண்டு ஏற்கனவே ஒரு போக்சோ வழக்கு பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.