பாகிஸ்தான் காதலனை சந்திக்க போவதாக விமான நிலையம் வந்த சிறுமி - அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்!
காதலனை சந்திக்க பாகிஸ்தான் செல்வதற்கு சிறுமி ஒருவர் ஜெய்ப்பூர் விமான நிலையம் வந்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு டிக்கெட்
ராஜஸ்தான் மாநிலம் சிகார் என்ற மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு வந்த சிறுமி டிக்கெட் கவுண்டரில் சென்று பாகிஸ்தான் லாகூருக்கு செல்ல டிக்கெட் கேட்டுள்ளார். இதனால் ஆச்சரியமடைந்த அதிகாரிகள் பெண்ணிடம் பாஸ்போர்ட் மற்றும் விசா அல்லது இதர ஆவணங்களைக் கேட்டுள்ளனர்.
ஆனால் இதுயெதும் சிறுமியிடம் இல்லாததால் சந்தேகமடைந்த விமான நிலையை அதிகாரிகள் சிறுமியை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணை
சிறுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் " தான் தனது இன்ஸ்டாகிராம் காதலனைச் சந்திப்பதற்காக பாகிஸ்தான் செல்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த சிறுமி போலீசாரை நம்ப வைக்க 'நான் இஸ்லாமாபாதில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்து அத்தை வீட்டில் வசித்து வருவதாகவும்,
இப்போது நான் அத்தையுடன் நல்லுறவில் இல்லை என்பதால் பாக்கிஸ்தான் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் "விமான நிலைய அதிகாரிகளை நம்ப வைக்க அதிகாரிகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், விசாரணையின் போது மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்களைக் குறித்து பாகிஸ்தானை சேர்ந்த காதலன் தன்னிடம் கூறியதாக சிறுமி தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிறுமியை போலீசார் அவரின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.