கிரிக்கெட் விளையாடியதும் தண்ணீர் குடித்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம் - அதிர்ச்சி சம்பவம்!
கிரிக்கெட் விளையாடிவிட்டு தண்ணீர் குடித்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவன்
உத்திரபிரதேச மாநிலம் ஹசன்புர் அருகே உள்ள காயஸ்தான் பகுதியைச் சேர்ந்த சிறுவன் பிரின்ஸ் சைனி (17). இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று பள்ளி விடுமுறை என்பதால், அந்த சிறுவன் நண்பர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார். விளையாடி முடிந்ததும் சிறுவன் குளிர்ந்த நீரை அருந்தியபோது, உடனே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழப்பு
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த மரணத்திற்கு மாரடைப்பு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.