10-ம் வகுப்பு மாணவனுடன் முத்தமிட்டு ரொமாண்டிக் போட்டோஷூட் - பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்!

Karnataka India
By Jiyath Dec 30, 2023 02:40 AM GMT
Report

10-வகுப்பு மாணவனுடன் ஏடாகூட போட்டோஷூட் நடத்திய பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

போட்டோஷூட் 

கர்நாடக மாநிலம் முருகமல்லா என்ற கிராமத்தில் உள்ள அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்றுள்ளனர்.

10-ம் வகுப்பு மாணவனுடன் முத்தமிட்டு ரொமாண்டிக் போட்டோஷூட் - பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்! | Teacher Suspended For Photoshoot With 10Th Student

அங்கு மாணவர்களோடு சென்ற புஷ்பலதா என்ற தலைமை ஆசிரியர், அதே பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவனோடு போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்களில் மாணவனும், ஆசிரியையும் முத்தமிடுவது போலவும், புஷ்பலதாவை அந்த மாணவன் தூக்கி வைத்திருப்பது போலவும், கையில் பூவோடு இருக்கும் ஆசிரியையின் சேலையை மாணவன் பிடித்து இழுப்பது போலவும் போட்டோஷூட் நடத்தியுள்ளனர்.

இந்தியாவில் ஒரு விசித்திர கிராமம்; ஆண்களுக்கு 2 திருமணம் கட்டாயம் - என்ன காரணம் தெரியுமா..?

இந்தியாவில் ஒரு விசித்திர கிராமம்; ஆண்களுக்கு 2 திருமணம் கட்டாயம் - என்ன காரணம் தெரியுமா..?

சஸ்பெண்ட்

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியையை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.

10-ம் வகுப்பு மாணவனுடன் முத்தமிட்டு ரொமாண்டிக் போட்டோஷூட் - பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்! | Teacher Suspended For Photoshoot With 10Th Student

மேலும், சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோரும் இது தொடர்பாக கல்வி அதிகாரி உமாதேவியிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் அந்த மாணவன் மற்றும் ஆசிரியையிடம் விசாரணை நடத்தி, கல்வி அதிகாரி உமாதேவி அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆசிரியை புஷ்பலதாவை இடைநீக்கம் செய்து சிக்காபல்லாபூர் மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.