4 வயது சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் வன்கொடுமை - ஆசிரியர் செய்த கொடூரம்!

Sexual harassment Tiruvannamalai Crime
By Sumathi Aug 28, 2022 07:34 AM GMT
Report

4 வயது சிறுமியை சாக்லெட் தந்து கணித ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

4 வயது சிறுமி

திருவண்ணாமலை மாவட்டம், மருத்துவ பாடி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அதில் தாளாளராக காமராஜ் இருந்து வருகிறார்.

4 வயது சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் வன்கொடுமை - ஆசிரியர் செய்த கொடூரம்! | Teacher Gave Sexual Harrassment To 4Year Child

இதனால் அடிக்கடி அந்த பள்ளிக்கு சென்று வந்துள்ளார். அதே பள்ளியில் எல்கேஜி படிக்கும் 4 வயது சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த சிறுமியை பெற்றோர்கள் போளூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 ஆசிரியர்-பாலியல் வன்கொடுமை

ஆனாலும், உடல்நிலையில், முன்னேற்றம் இல்லாத நிலையில், இதனைத் தொடர்ந்து சிறுமி வேலூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரிய வந்தது.

4 வயது சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் வன்கொடுமை - ஆசிரியர் செய்த கொடூரம்! | Teacher Gave Sexual Harrassment To 4Year Child

அதனைத் தொடர்ந்து, சைல்டுலைன் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து, சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபாவதி, மாவட்ட எஸ்பி கார்த்திகேயனுக்கு தகவல் அளிக்கப்பட்டு புகார் கொடுக்கப்பட்டது.

பரபரப்பு

அதன் அடிப்படையில், போலீஸார் சம்பந்தபட்டவர்களின் போட்டோக்களை சிறுமியிடம் காண்பித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்தது தாளாளர் காமராஜ் என்பது தெரியவந்தது.

அதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால், பள்ளி முன்பு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது. இதனால் பள்ளி முன்பு 200க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.