ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க 26 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு..!
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 26ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
காலக்கெடுவினை நீட்டிக்குமாறு கோரிக்கைகள் எழுந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.
ஒரே நேரத்தில் அதிகமானோர் விண்ணப்பித்ததால் தொழிநுட்ப கோளாறுகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து கடந்த 7 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
விண்ணப்பங்கள் கடந்த 13 ஆம் தேதி வரை பெற்ப்பட்டு வந்தன.இந்நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடமிருந்து
ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுக்களை நீட்டிக்குமாறு கோரிக்கைகள் தொடர்ந்து பெறப்பட்டதை அடுத்து 18.04.2022 முதல் 26.04.2022 வரை விண்ணப்பங்கள் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுவதாக ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.