பிரபல கிரிக்கெட் வீரருக்கு மூன்றரை ஆண்டுகள் தடை - அதிர்ச்சியில் ரசிகர்கள்

Zimbabwe brendantaylor
By Petchi Avudaiappan Jan 30, 2022 08:26 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

ஜிம்பாப்வேயின் முன்னாள் கேப்டன் பிரெண்டன் டெய்லருக்கு மூன்றரை ஆண்டுகள் தடை விதித்து ஐசிசியின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ஜிம்பாப்வேவை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் பிராண்டன் டைலருக்கு இந்திய தொழில் அதிபரிடமிருந்து ஒரு கடிதம் வந்துள்ளது. அதில் அவரை ஸ்பாட் ஃபிக்ஸ் சூதாட்டத்தில் சிக்க வைக்க கொகெய்ன் போதை மருந்து பயன்படுத்திய வீடியோவைக் கொண்டு இந்திய தொழிலதிபர் ஒருவர் மிரட்டுவதாகவும் அதிர்ச்சி தகவலை கூறினார்.

சூதாட்ட தரகர்கள் யாராவது அணுகினால் உடனடியாக ஐசிசியிடம் புகார் அளிக்க வேண்டும்.அப்படி கூறாமல் தாமதப்படுத்தினால், பிக்ஸிங் செய்ததற்கான தண்டனையே வழங்கப்படும் என்பது ஐசிசி விதி. இதனால் டெய்லர் விளையாடுவது கேள்விக்குறியானது. மேலும் நான் எந்த விதமான மேட்ச் பிக்சிங்கிலும் ஈடுபட்டதில்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.

நான் தவறுகள் செய்திருக்கலாம் ஆனால் நான் ஏமாற்றுபவன் அல்ல. அழகான கிரிக்கெட் விளையாட்டின் மீதான எனது நேசம் என் வழியில் வீசப்படும் எந்த அச்சுறுத்தல்களையும் விட அதிகமாக உள்ளதாக தெரிவித்திருந்தார். ஜனவரி 28 ஆம் தேதி முதல் தடையை ஏற்றுக்கொண்டதாக ஐசிசி கூறியுள்ளார். இந்நிலையில் ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் டெய்லர் தன் ட்விட்டரில் அவர் தன் சூதாட்டக்காரருடனான தொடர்பை புகாரளிக்கத் தாமதித்தது பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

ஐசிசி 'மிஸ்டர் எஸ்' என்று குறிப்பிடும் தொழிலதிபர்களுடன் இந்தியாவில் நடந்த சந்திப்பின் போது கொகெயின் பயன்படுத்தி படம்பிடிக்கப்பட்டதை டெய்லர் வெளிப்படுத்தினார். இதனால் முன்னாள் கேப்டன் பிரெண்டன் டெய்லருக்கு ஐசிசியின் ஊழல் தடுப்புப் பிரிவு அனைத்து கிரிக்கெட்டிலும் இருந்து மூன்றரை ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இதேபோல் ஊக்கமருந்து தடையை மீறியதாக இன்னொரு குற்றச்சாட்டையும் டெய்லர் ஒப்புக் கொண்டார். இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.