தரங்கபாடியில் முகக்கவசம் அணியாமல் டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்

By Praveen May 09, 2021 12:58 PM GMT
Report

தரங்கம்பாடி தாலுக்காவில் டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் மதுபாட்டில்கள் வாங்க குவிந்தனர்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் 2வது அலை தொற்றை கட்டுபடுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் நாளை 10ந் தேதி திங்கள்கிழமை முதல் வருகின்ற 24ம் தேதி வரை 15 நாட்களுக்கு காய்கறிமளிகை, இறைச்சிகடைகள், டீ கடைகள் மதியம் 12 மணி வரை இயங்கும் என்றும் உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும்.

பெட்ரோல், டீசல் பங்குகள் இயங்கும், பஸ் போக்குவரத்து தடை செய்யப் படுவதாகவும் அதேபோல டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்பின் எதிரொலியாக செம்பனார்கோவில் அருகே மேலப்பாதி, நடுக்கரை மற்றும் பரசலூர் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் மது வாங்குவதற்காக குடிமகன்களின் கூட்டம் குவிந்தது.

முழு ஊரடங்கை முன்னிட்டு மதுபாட்டில்கள் வாங்கி இருப்பு வைப்பதற்காக மது பிரியர்கள் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடை பிடிக்காமலும் மதுவாங்க முண்டியடித்தனர். ஒருசிலர் அட்டை பெட்டிகளில் ஏராளமான மது பாட்டில்களை வாங்கி சென்றனர்.