ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021 - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலானது 2 கட்டங்களாக நடந்தது. இதில் முதல்கட்ட தேர்தல் அக்.6-ம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில், 2ம் கட்ட தேர்தல் அக்.9-ம் தேதி நடந்தது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடந்தது.
இந்நிலையில் பலத்த பாதுகாப்புடன் தற்பொழுது வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி இருக்கிறது. முதல் கட்டமாக அக்டோபர் 6ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 74.37% வாக்குகள் பதிவானது. 2ம் கட்டமாக அக்டோபர் 9ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 78.47% வாக்குகள் பதிவாகி உள்ளது.