உதயநிதி ஸ்டாலின் பதில் கூற வேண்டும் - உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் - நடந்தது என்ன?

tamilnadu udhayanithi chennai-court
By Nandhini Dec 21, 2021 11:45 AM GMT
Report

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனுவை ஏற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனுவை ஏற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று ஆர்.பிரேமலதா என்ற வாக்காளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன், இந்திய தேர்தல் ஆணையம், உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் என்று கூறி, வழக்கை அடுத்த மாதம் 4ம் தேதி ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.