சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை : 4 சுரங்கப்பாதைகள் மூடல்

chennai close tunnels
By Nandhini Dec 31, 2021 03:43 AM GMT
Report

சென்னையில் நேற்று நண்பகல் முதல் இரவு 10 மணி வரை பதிவான கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து தேங்கி இருக்கிறது. இதனால், சென்னை நகரில் 4 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டிருக்கிறது.

துரைசாமி சுரங்கப்பாதை, ஆர்.பி.ஐ சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி இருப்பதால், வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.   

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை : 4 சுரங்கப்பாதைகள் மூடல் | Tamilnadu Tunnels Close Chennai