ரயில் தடம் புரண்டு விபத்து : சென்னை – அரக்கோணம் இடையே ரயில் சேவை பாதிப்பு - மக்கள் அவதி

tamilnadu-train-accident
By Nandhini Dec 18, 2021 03:41 AM GMT
Report

அரக்கோணம் மற்றும் மோசூர் பகுதி இடையே சென்னையிலிருந்து ரேணிகுண்டா செல்லும் 22 பெட்டிகளை கொண்ட சரக்கு ரயில் ஒன்று திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியது. சென்னையில் இருந்து ரேணிகுண்டா சென்ற சரக்கு ரயில் இன்று மோசூர் என்ற இடத்தில் தடம் புரண்டது.

சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டதால் அதை மீட்கும் பணியில் ரயில்வே துறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் சென்னை -அரக்கோணம் இடையே செல்லும் மின்சார ரயில் போக்குவரத்து இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனையடுத்து, ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இன்று சென்னை- அரக்கோணம் இடையே செல்லும் மின்சார ரயில் ரத்தாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து தடம் புரண்ட சரக்கு ரயிலை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை கடற்கரை அரக்கோணத்திற்கு நாளை அதிகாலை 1. 20 மணிக்கு இயக்க வேண்டிய மின்சார ரயிலானது அரை மணி நேரம் தாமதமாக அதாவது அதிகாலை 1.50 மணிக்கு இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.