முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது போலீசார் வழக்கு பதிவு - வெளியான முக்கிய தகவல்

tamilnadu-thangamani- the-police-registered-a-case
By Nandhini Dec 15, 2021 02:40 AM GMT
Report

சொத்துக்குவிப்பு புகாரில் தங்கமணி அவரது, மகன் தரணிதரன், அவரது மனைவி சாந்தி மீது நாமக்கலில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றது. சென்னை, நாமக்கல், கோவை உள்ளிட்ட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.

மேலும், கர்நாடகத்தில் ஒரு இடத்திலும், ஆந்திர மாநிலத்திலிருந்து 2 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருமானத்துக்கு அதிகமாக தங்கமணி, மனைவி, மகன் ரூ.4.85 கோடி சொத்து குவித்ததாக தகவல் வெளியானது.

2016 முதல் 2020 மார்ச் வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ. 4.85 கோடி சொத்து சேர்த்ததாக தங்கமணி மீது வழக்குபதிவு செய்யப்பட்டிருக்கிறது. கிரிப்டோகரன்சியில் தங்கமணி பெருமளவில் முதலீடு செய்திருக்கிறார் என்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் , கே.சி.வீரமணி உள்ளிட்டோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது போலீசார் வழக்கு பதிவு - வெளியான முக்கிய தகவல் | Tamilnadu Thangamani The Police Registered A Case