வீடு இடிந்து விழுந்து 9 பேர் மரணம் - தலா ரூ.5 லட்சம் நிதியுதவி - தமிழக முதலமைச்சர் அறிவிப்பு
பேரணாம்பட்டில் வீடு இடிந்து இறந்த 9 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அஜிதியா வீதியில் 3 வீடுகள் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 4 குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இடிபாடுகளில் சிக்கிய 8 பேரை மீட்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியிருக்கும் 3 பேரை மீட்பு படையினர் தேடி வருகிறார்கள். வேலூர் மாவட்டத்துக்கு 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைந்து சென்றுள்ளது.
குடியாத்தம் செம்பள்ளி கிராமத்தில் மழைநீர் சூழ்ந்ததால் தவித்து வரும் 230 பேரை மீட்கவும் ஒரு குழு சென்றுள்ளது.
இந்நிலையில், வீடு இடிந்து விழுந்து இறந்து போன 9 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சமும், காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.