என்னோட வெக்கத்த விட்டு சொல்றேன் தமிழக அதிகாரிகள் ரொம்ப பயப்படுறாங்க : அமைச்சர் நேருவின் பேச்சால் பரபரப்பு
தமிழகத்தில் உள்ள அரசு அதிகாரிகள் சிலர் மத்திய அரசுக்கு அஞ்சி செயல்படுவதாக அமைச்சர் கே என் நேரு திருச்சியில் பேசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசுக்கு பயப்படும் அதிகாரிகள்
திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் கே என் நேரு வெட்கத்தை விட்டு கூறுகிறேன் தமிழக அதிகாரிகள் சிலர் மத்திய அரசுக்கு அஞ்சி செயல்படுவதாக கூறினார்.
மேலும் பிளவுபட்டுக் கிடக்கும் அதிமுகவின் இரு அணிகளையும் பாஜகதான் ஒன்று சேர விடாமல் சதி செய்வதாக குற்றம் சாட்டிய அமைச்சர் கே என் நேரு .
பாஜக சதி செய்கிறது
அதிமுகவின் இரண்டு கட்சிகள் இணையாமல் இருந்தால்தான் பாஜகவால் சட்டசபையில் எதிர்க்கட்சியாக செயல்பட முடியும் என்றும் பாஜக சிறிய விஷயத்தை கூட பெரிய விஷயமாக மாற்றுவதாக தமிழக பாஜக மீது குற்றம் சாட்டினார்.
மேலும்,முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சிக்கு வரும் 4ஆம் தேதி வருவாரா என்பது நாளை தான் தெரியும் என்றும் அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு முதுகு வலி ஏற்பட்டதன் காரணமாக தேவர் ஜெயந்திக்கு மரியாதை செலுத்தாமல் மருத்துவர் அறிவுறுத்தலின் பேரில் ஓய்வில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.