மழை வெள்ளத்தில் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் தவித்த கர்ப்பிணி - பத்திரமாக மீட்ட வீரர்கள்
tamilnadu-samugam-rain
By Nandhini
தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரில் மழை வெள்ளத்தால் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணியை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டார்கள்.
இரும்புலியூரில் உள்ள ரோஜா தோட்டம், அருள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் அதிகளவில் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் அருள் நகரில் வீடு ஒன்றின் 2வது மாடியில் வசிக்கும் 9 மாத கர்ப்பிணி லட்சுமி என்பவர் வெள்ளத்தால் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.
இதனையடுத்து, அவரது கணவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், அங்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் லட்சுமியை மீட்டு பத்திரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கண்ணாடியை திறந்ததும் அசுர வேகத்தில் தாக்கிய Eastern Indigo Snake... பதறவைக்கும் வைரல் காணொளி! Manithan

இந்தியாவில் தேனிலவிற்கு சென்றவேளை கொடூரம் : கூலிப்படையை வைத்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி IBC Tamil

Viral Video: கழுகை மீண்டும் மீண்டும் தண்ணீருக்குள் மூழ்க வைத்த மீன்! இறுதியில் நடந்த டுவிஸ்ட் Manithan
