‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

tamilnadu-samugam-cm-stalin
By Nandhini Dec 18, 2021 06:13 AM GMT
Report

மேல்மருவத்தூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மைதானத்தில், நம்மை காக்கும் 48 – இன்னுயிர் காப்போம் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

சாலை விபத்தில் சிக்குவோருக்கு முதல் 48 மணி நேரம் இலவச சிகிச்சை, விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வோருக்கு ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், நம்மை காக்கும் 48 – இன்னுயிர் காப்போம் திட்டம் போன்ற திட்டங்களை மேல்மருவத்தூரில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார்.

இந்தப் புதிய திட்டத்தை மேல்மருவத்தூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மைதானத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்திருக்கிறார். இதற்காக தமிழகம் முழுவதும் 610 மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.