ரணகளத்திலும் உனக்கு குதூகலம் கேட்குதா...? பெண் செய்த காரியம் - திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்

tamilnadu-samugam
By Nandhini Nov 09, 2021 05:11 AM GMT
Report

சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த 2 நாட்கள் பெய்து வரும் கனமழையால் சாலைகள் எங்கும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்கள் பலவும் படகு குழாம் மாதிரியே காட்சியளிக்கின்றன.

இதில் மழை வெள்ளம் வீடுகளில் புகுந்து தத்தளிப்போருக்காக அரசு அவசர முகாம்களை அமைத்துள்ளது. தமிழக அரசு தவிர, தன்னார்வலர்களும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கி வருகிறார்கள். அப்படி மழை நீர் புகுந்து தத்தளிப்பவர்கள் மீட்டு முகாம்களுக்கும், பாதுகாப்பான இடங்களுக்கும் அனுப்பி வைக்கின்றார்கள் மீட்பு படையினர்.

இப்படி மீட்பு படையினர் படகுகளில் அழைத்துச்செல்லும்போது ஒரு பெண், ஏதே படகு குழாமில் படகு சவாரி செல்லுவதைப்போல நினைத்துக்கொண்டு செல்பி எடுக்கிறார். அதை மீட்பு படையினர் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பின்னர் நிலைமையை உணர்ந்து, படகில் அருகில் அமர்ந்திருக்கும் இன்னொரும் அந்தப்பெண்ணுக்கு அவர் செய்யும் தவறை எடுத்துச்சொல்வதாக தெரிகிறது.

இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் ரணகளத்திலும் உனக்கு குதூகலம் கேட்குதான்னு கமெண்ட் செய்து வருகின்றனர்.