ஓட்டுப்பெட்டிக்குள் வாக்குச்சீட்டுக்கு பதிலாக வாக்காளர் அடையாள அட்டை போட்ட மக்கள் - அதிகாரிகள் விசாரணை

tamilnadu-samugam
By Nandhini Oct 12, 2021 08:22 AM GMT
Report

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6ம் தேதி மற்றும் 9ஆம் தேதி என 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

தற்போது, வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை ஆகிய 9 மாவட்டங்களுக்கு நடந்த முதல் கட்ட தேர்தலில் 74. 37 சதவீத வாக்குகளும், 2ம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

இன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகின்றன. வாக்கு எண்ணிக்கை 74 மையங்களில் நடைபெற்று வருகிறது இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

இதில் சில சுவாரஸ்ய விஷயங்கள் நடந்து தற்போது தெரியவந்துள்ளது. அது என்னவென்றால், ஓட்டுப்பெட்டி வாக்குச்சீட்டுகளை போடுவதற்கு பதிலாக சிலர் வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு சென்றிருக்கிறார்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் சந்திரபுரம் பகுதியில் வாக்குப் பெட்டிகளை பிரித்து பார்த்து வாக்குகளை தரம் பிரித்து எண்ணிக் கொண்டிருந்த பொழுது ஒரு சில வாக்காளர்கள், தங்களது வாக்கு சீட்டுக்கு பதிலாக தவறுதலாக வாக்காளர் அடையாள அட்டையை வாக்குப்பெட்டிகள் போட்டிருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.   

ஓட்டுப்பெட்டிக்குள் வாக்குச்சீட்டுக்கு பதிலாக வாக்காளர் அடையாள அட்டை போட்ட மக்கள் - அதிகாரிகள் விசாரணை | Tamilnadu Samugam

ஓட்டுப்பெட்டிக்குள் வாக்குச்சீட்டுக்கு பதிலாக வாக்காளர் அடையாள அட்டை போட்ட மக்கள் - அதிகாரிகள் விசாரணை | Tamilnadu Samugam