அரியலூர் அருகே ஒற்றை கண்ணுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி!
tamilnadu-samugam
By Nandhini
அரியலூர் மாவட்டம் தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் சிவகுருநாதன். இவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக கால்நடைகளை வளர்த்து, பராமரித்து வருகிறார்.
இந்நிலையில், இவரது ஆடு ஒன்று இரட்டை ஆட்டுக்குட்டிகளை ஈன்றது. அதில் ஒரு ஆட்டுக்குட்டி ஒற்றை கண்ணுடன் பிறந்தது. இந்த ஆட்டுக்குட்டியை அப்பகுதியில் உள்ள ஊர் மக்கள் அனைவரும் வந்து வியப்புடன் பார்த்துவிட்டுச் செல்கின்றனர்.