தமிழ்நாட்டிற்கு புனேவிலிருந்து மேலும் 3,12,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் - விமானம் மூலம் வந்திறங்கியது!

tamilnadu-samugam
By Nandhini Jul 23, 2021 12:51 PM GMT
Report

தமிழ்நாட்டிற்கு மேலும் 3,12,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 26 பாா்சல்களில் மகராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து விமானத்தில் இன்று மாலை 3.30 மணி விமானத்தில் சென்னை வந்து சோ்ந்தன. அதில் 1,44,000 டோஸ் தடுப்பூசிகள் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறைக்கும்,1,68,000 டோஸ் தடுப்பூசிகள் பெரியமேட்டில் உள்ள ஒன்றிய மருந்து சேமிப்பு கிடங்கிற்கும் வந்தன.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது. இதையடுத்து தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவா்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது.

அதிலும் 3வது அலையிலிருந்து தப்பிக்க 2 டோஸ் தடுப்பூசிகளும் போட்டுக்கொள்வது அவசியம் என்று அரசு அறிவித்துள்ளதால், பொதுமக்களும் மிகுந்த ஆா்வமுடன் வந்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்கின்றனா்.

இதனால் தமிழகத்திற்கு அதிக அளவில் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. எனவே தமிழ்நாட்டிற்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி டோஸ் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சா் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

இந்நிலையில், இன்று ஒன்றிய சுகாராத்துறை தமிழ்நாட்டிற்கு மேலும் 3,12,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒன்றிய மருத்துவ கிடங்கிலிருந்து விடுவித்தது.அந்த 3,12,000 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அடங்கிய 26 பாா்சல்களுடன் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் புனேவிலிருந்து இன்று மாலை 3.30 மணிக்கு சென்னை விமானநிலையம் வந்தது.

சென்னை விமானநிலைய லோடா்கள் அந்த தடுப்பூசிகள் அடங்கிய பாா்சல்களை விமானத்திலிருந்து கீழே இறக்கினா். இதையடுத்து உடனடியாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தடுப்பூசி பாா்சல்களை தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

அதில் 1,44,000 டோஸ் தடுப்பூசிகள் அடங்கிய 12 பாா்சல்கள் குளிா்சாதன வாகனங்களில் ஏற்றி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகம் கொண்டு சென்றனா்.

1,68,000 டோஸ் தடுப்பூசிகள் அடங்கிய 14 பாா்சல்கள் சென்னை பெரியமேட்டில் உள்ள ஒன்றிய மருத்துவ கிடங்கிற்கு வந்திருந்தன. அவைகளை ஒன்றிய மருத்துவ கிடங்கு அதிகாரிகள் குளிா்சாதன வாகனத்தில் ஏற்றி பெரியமேடு ஒன்றிய மருத்துவ கிடங்கிற்கு எடுத்து சென்றனா்.